காங்கிரஸ் கட்சி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா

புழல் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும், நல உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றன. 

புழல் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும், நல உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றன. 
காமராஜரின் பிறந்த நாளையொட்டி, புழல் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும், நல உதவிகள் வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். புழல் வட்டார காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.எஸ்.ஏ.மணிகண்டன் முன்னிலை வகித்தார். தலைவர் பி.டி.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். 
முன்னாள் மத்திய அமைச்சர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், மிதிவண்டிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினர். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ரங்கபாஷ்யம், சிவராமன், குலாம் மொய்தீன், நாசே.ராஜேஷ், விக்டரி ஜெயக்குமார், சிதம்பரம், வாசுதேவன், ரவீந்திரன், கபிலன், புழல் குபேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கே.எஸ்.ஆனந்தன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com