திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கவரைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் சந்திரன், சத்தியராஜ், டாக்டர் பரிமளம், நெசவாளர் அணி நிர்வாகி நாகலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், அபிராமி, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், தகவல் தொடர்பு தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக மாநில தீர்மான குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர் , முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் பங்கேற்ற திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எம்எல்ஏ கோ.வி.செழியன், எம்எல்ஏ வசந்தம் கார்த்திக் ஆகியோர் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் பற்றிப் பேசினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் மு.மணிபாலன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருமலை, மாவட்டப் பிரதிநிதி கே.வி.ஆனந்தகுமார், பொறியாளர் அணி நிர்வாகி கோகுல்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.