போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு அரசு ஆரம்பப் பள்ளி சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சசிகலா தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பூவராகவன் முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியை லீலாராணி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட்ராசன், இடைநிலை ஆசிரியர் ஜாகீர் உசேன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வத்தின்போது, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை கைவிடக் கோரியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.