அம்மா திட்ட சிறப்பு முகாம்

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெய்யாறு கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெய்யாறு கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கே.ஆர்.நரேந்திரன் தலைமை வகித்தார். இதில், பட்டா மாற்றம், சிறுகுறு விவசாயிச் சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 59 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை பரிசீலித்த வருவாய்த் துறையினர், 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். முகாமில் துணை வட்டாட்சியர்
முகமதுகனி, வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com