ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் ஐயப்ப பக்தர்களின் 7-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் 7-ஆவது ஆண்டாக பிரம்மாண்டமான முறையில் செட்டிங் அமைத்து ஆன்மிக இசைக் கச்சேரி நடத்தினர். இதைத் தொடர்ந்து, விளக்கு பூஜை, அன்ன தானம் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.