போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண்ணை போளூர் போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர். மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கௌரி (45). இவர், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, கெளரியை போளூர் போலீஸார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.