லாரி மோதியதில் பெண் சாவு

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கத்தை அடுத்த விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலாஜி மனைவி வனிதா(30). இவர், ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் அந்தக் கிராமத்திலுள்ள செங்கம் - திருவண்ணாமலை சாலையோரம்  நடந்து சென்றார். அப்போது, செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி, வனிதா மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரான செங்கம் துக்காப்பேட்டையைச் சேர்ந்த அஜீஸ் மகன் நூர்முகமது (37) என்பவரை பொதுமக்கள் பிடித்து பாய்ச்சல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ததுடன், லாரியை பறிமுதல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com