ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் ஊக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் எம்.மோகன்குமார் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் அருண்குமார், மண்டல நிர்வாகி வி.சுரேஷ்பாபு, தன்னார்வலர் வி.டி.எஸ்.சுந்தரம் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தா வரவேற்றார். இதில் 10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.