ஊக்குவிப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனிநபர் கழிவறை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனிநபர் கழிவறை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை  ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த தனிநபர் கழிவறை அமைக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி தலைமை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் பழனி, படவிட்டான், தனவந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார்.  
மாநில பயிற்றுநர் காந்திமதி, ஊக்குவிப்பாளர் பயிற்றுநர் ராதிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி (கலசப்பாக்கம்), ஆனந்தன்(ஜவ்வாதுமலை), வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன், வெங்கடேசன், சிலம்பரசன் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com