செங்கத்தைஅடுத்த இளங்குண்ணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரலாறு, தொன்மை பாதுகாப்பு மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாரதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் லோகநாதன், சிவப்பிரகாசம் ஆகியோர் மாணவர்கள் வரலாறுகளை எளிய வழியில் படித்து தெரிந்து கொள்வது குறித்து விளக்கினர். அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் பகுதியின் தொன்மை சிறப்புகள் குறித்து பழங்கால கற்கள் மற்றும் இரும்புகளை காட்டி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்துப் பேசினர்.
உடன் ஆசிரியர்கள் ரகுபதி, திருப்பதி உள்பட மாணவர்கள் கலந்துகொண்டனர்.