ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 2,300 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு

திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 2,300 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 2,300 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஜூலை 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.
 இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 22 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இறுதியாக, 2,300 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com