திருவண்ணாமலையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெற உள்ள இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்கான மாரத்தானில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பசுமை மாராத்தான் லோகோவை ஏ.எஸ்.மோட்டார்ஸ் உரிமையாளர் சீனுவாசன் திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் இளம்தளிர் இயக்கத் தலைவர் ஆர்.டி.பிரகாஷ், செயற்பாட்டாளர்கள் விஜய், லிங்காபாய், கோபி, ஸ்டாலின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.