திருவண்ணாமலை அருகே மூதாட்டியைத் தாக்கியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கம்சலா (62). இவரது வீட்டுக்குத் தெருக் குழாயில் இருந்து வரும் குடிநீர் குழாயை ஞாயிற்றுக்கிழமை ஜெயராமன் என்பவர் துண்டித்தாராம். இதை கம்சலா தட்டிக் கேட்டாராம்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஜெயராமன், அவரது சகோதரர் அருணா, மகன்கள் பவன்குமார், சரத்குமார், அருண்குமார் ஆகியோர் சேர்ந்து மூதாட்டி கம்சலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த கம்சலா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் ஜெயராமன் உள்ளிட்ட
5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.