திருவண்ணாமலை தி பெஸ்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளிச் செயலரும், முதல்வருமான சுலோச்சனா தலைமை வகித்தார். ஆசிரியைகள் லாவண்யா, மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிலம்பரசன் வரவேற்றார்.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தண்ணீர்தான் அமுதம் என்ற தலைப்பில் பேசினார். இதைத் தொடர்ந்து, உலக தண்ணீர் தின விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், திருக்குறள் தொண்டு மைய துணைத் தலைவர் சுப்பிரமணி, பள்ளித் தாளாளர் நடராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.