வந்தவாசி நகராட்சி வரி பாக்கியை மார்ச் 30-க்குள் செலுத்த வலியுறுத்தல்

வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி வலியுறுத்தினார்.

வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான குத்தகை வாடகை ஆகியவற்றை சிலர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகரின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக நகராட்சி கணினி மையத்தில் வரி பாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com