சேத்துப்பட்டு வட்டம், நம்பேடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 60 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி தலைமை வகித்து, பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று உள்பட 60 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். வட்டாட்சியர் சாந்தி, மண்டலத் துணை வட்டாட்சியர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.