வேட்டவலம், ஆவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 3 முதல் 4 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது. பெரிய பெரிய அளவில் வானில் இருந்து கீழே விழுந்த ஆலங்கட்டிகளை சிறுவர்கள் எடுத்து, விளையாடி மகிழ்ந்தனர்.
முன்னதாக, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை பகல் 110 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.