ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆரணி ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆரணி ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
ஆரணி ஆரஞ்ச் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 58 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத்தந்தனர். இவர்களில், ஆர்.டெல்லிகுமரன் 494, ஆர்.ஆர்த்தி 492, வி.அம்ருதா 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 480-க்கு மேல் 8 மாணவர்களும், 450-க்கு மேல் 22 மாணவர்களும், 400-க்கு மேல் 16 மாணவர்களும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளித் தாளாளர் கே.சிவக்குமார், துணைத் தலைவர் அபர்ணாசிவக்குமார், பள்ளி முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com