மாவட்டத்தில் பரவலாக மழை

ஆரணி உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

ஆரணி உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
ஆரணி மற்றும் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளான வாழப்பந்தல், மாமண்டூர், எஸ்.வி.நகரம், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடனும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ந்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com