செய்யாறு அருகே சேலையில் தீப்பற்றி சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறு அருகே உள்ள பாராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி இளங்கோ. இவரது மனைவி மாலதி (29).
இவர், கடந்த 6-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, சேலையில் தீ பிடித்துக் கொண்டதில் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை உடனடியாக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து மாலதியின் தம்பி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு, செய்து விசாரணை மேற்கொண்டனர்.