திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் பாண்டியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தானிப்பாடி பகுதியில் போலி மருத்துவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குமரேசனின் (40) மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் குமரேசன் மருந்தாளுநருக்கு படித்து
விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குமரேசனை பிடித்து தானிப்பாடி காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனர்.