அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சாவு

செஞ்சி அருகே வயலுக்குச் சென்ற விவசாயி, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை இறந்தார்.

செஞ்சி அருகே வயலுக்குச் சென்ற விவசாயி, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை இறந்தார்.
செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சின்னதுரை(27), விவசாயி. இவர் இதே ஊரைச்சேர்ந்த தனுசு என்பவரது நிலத்தை குத்தகை எடுத்து பயிர் செய்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விளைநிலத்துக்குச் சென்ற சின்னதுரை, வயல் வரப்பின் மீது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். 
இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com