தீபத் திருவிழா: வேலூரில் இருந்து 160 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து 160 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து 160 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வேலூர் கோட்ட மேலாண்மை இயக்குநர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 2}ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சென்று வர ஏதுவாக டிசம்பர் 1 முதல் 3}ஆம் தேதி வரை வேலூரில் இருந்து கூடுதலாக 100 பேருந்துகளும், திருப்பத்தூர், ஆற்காட்டில் இருந்து தலா 30 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்லும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com