100 வயது முதியவரின் கண்கள் தானம்

செய்யாறில் மரணமடைந்த 100 வயது முதியவரின் கண்கள் ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

செய்யாறில் மரணமடைந்த 100 வயது முதியவரின் கண்கள் ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
செய்யாறு லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி குணசேகரன். இவரது தந்தை கே.கதிர்வேல் (100). இவர், கடந்த சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மரணமடைந்தார்.
இதையடுத்து, குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில், காஞ்சிபுரம் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து கதிர்வேலின் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பி.எல்.ரவி, மாவட்டத் தலைவர் பி.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com