செய்யாறில் அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டியில் பங்கேற்க அனைத்துத் தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்யாறில் செயல்பட்டு வரும் அக்னி சிறகுகள் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரி மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, நடப்பாண்டில் நடத்தப்படும் போட்டியில் அனைத்துத் தரப்பு கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் பரிசாக பகிர்ந்தளிக்கப்படும். பதிவுக் கட்டணம் கிடையாது. போட்டியில் கலந்து கொள்ள மாணவர்கள் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் வரும் 25-ஆம் தேதியாகும். போட்டிகள் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரும் 30-ஆம் தேதி நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அக்னி சிறகுகள் (மாணவர்களுக்கான கல்வி மையம்) 118, ஆற்காடு சாலை, செய்யாறு - 604407, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரியிலும், 9444025206, 9025619003 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.