செய்யாறை அடுத்த அசனமாபேட்டை கிராமத்தில் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அசனமாபேட்டை கிராமத்தில் தமிழக தன்னார்வத் தொண்டர்கள் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அசனமாபேட்டை கூட்டுச்சாலைப் பகுதியிலும், பெருங்கட்டூர் கிராம எல்லையிலும் செயல்படும் 2 டாஸ்மாக் மதுக் கடைகளை மாநில அரசு அகற்றக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.