தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு 

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற 2 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்துத் தெரிவித்தார். 

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற 2 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.
 தமிழக அரசு சார்பில், 2016, 2017-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த விழாவில், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை மலர்ந்த திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிறுவனர் சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
 விருது பெற்று திருவண்ணாமலை திரும்பிய இருவரையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com