செய்யாறில் மரணமடைந்த மூவரின் கண்களை ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத்தினர் தானமாகப் பெற்றனர்.
செய்யாறு பெரிய தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி உதவியாளர்
ஜி.இளங்கோவன் (76), செய்யாறு தே.ச.பழனிவேல் தெருவைச் சேர்ந்த டீக் கடை தொழிலாளி எம்.வெங்கடேசன் (60) ஆகியோர் வியாழக்கிழமை இறந்தார். செய்யாறு வைத்தியர் தெருவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி பி.கார்த்திகேயன் (68) வெள்ளிக்கிழமை இறந்தார்.
இவர்கள் மூவரின் குடும்பத்தார் அளித்த ஒப்புதலின்பேரில், செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத்தினர் உதவியுடன், காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மூவரின் கண்களையும் வெள்ளிக்கிழமை தானமாகப் பெற்றனர்.