தாயை தாக்கியதாக மகன் கைது

திருவண்ணாமலையில் தாயை கல்லால் தாக்கியதாக மகனை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் தாயை கல்லால் தாக்கியதாக மகனை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் வைரக்கண்ணு மனைவி சுசிலா (70). இவரது மகன் ராமஜெயம் (45). இவர், புதன்கிழமை சுசீலாவிடம் சென்று செலவுக்குப் பணம் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, சுசிலா பணம் தரவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், சுசிலாவை கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாராம். பலத்த காயமடைந்த சுசிலாவை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ராமஜெயத்தை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com