வேட்டவலம் அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சடையன் மகன் முருகேசன் (வயது 70). இவர், வெள்ளிக்கிழமை மாலை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே பைக்கில் வந்த ஆவூர், அமீனா நகரைச் சேர்ந்த அமீல் ஜான் மகன் அகமது பாஷா (29), முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
இதில், பலத்த காயமடைந்த முருகேசனை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். எனினும், அங்கு முருகேசன் சனிக்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.