செய்யாறு அருகே பைக் விபத்தில் பெண் வெள்ளிக்கிழமை இறந்தார்.
ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், தனது தங்கை காஞ்சனா(42)வுடன் மாமண்டூரிலிருந்து சட்டுவந்தாங்கல் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வெம்பாக்கம் காளி கோயில் அருகே சென்ற போது, நாய் குறுக்கிட்டதால், மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் காயமடைந்த காஞ்சனா, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பிரம்மதேசம் போலீஸார் விசாரிக்கின்றனர்.