செங்கம் அருகே நேரு யுவகேந்திரா மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சியில் உள்ள நேரு யுவகேந்திரா மன்றம், அன்னை புவனேஸ்வரி மகளிர் மன்றம் ஆகியவை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா பேரணியில் தூயநெஞ்ச பள்ளியின் தாளாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
நேரு யுவகேந்திர மன்ற நிர்வாகிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.