ஆரணி பெரியகடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, சுவாமி அன்ன வாகனத்தில் வீதியுலா வந்தார். பிரமோற்சவத்தையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 23-ஆம் தேதியன்று நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.