செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள புளியரம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி, உக்கல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன.
புளியரம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் 10 மாணவிகள் உள்பட 22 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை விஜாய்கிறிஸ்டினாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோல, செய்யாறு அருகே உள்ள உக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 31 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பூபாலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் பாராட்டினர்.