குடியாத்தம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் இறந்தார்.
குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்தவர் முரளி (34), கள்ளூரைச் சேர்ந்தவர் மணி (30). இருவரும் லாரி ஓட்டுநர்கள். வெள்ளிக்கிழமை இருவரும் பைக்கில் பலமநேருக்குச் சென்றனர். அப்போது, காத்தாடிகுப்பம் அருகே வந்தபோது, எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கார் பைக் மீது மோதியது. இதில் முரளி நிகழ்விடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மணி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து குடியாத்தம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.