வேட்டவலம் அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நாராயணசாமி (55). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை நிலத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராஜாபாளையம் பகுதியில் உள்ள திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் நாராயணசாமி மீது மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.