கலசப்பாக்கத்தை அடுத்த மேட்டுபாளையம் கிராமத்தில் உள்ள மேத்யூஸ் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஆண்கள், பெண்கள் என 20 பேருக்கு நீமோகாக்கல் நிமோனியா என்ற தடுப்பூசி போடப்பட்டது.
இதன் மூலம் 60 முதல் 90 வயது வரை உள்ள முதியோர்களுக்கு மார்புச் சளி மூலம் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க இயலும்.
முகாமில், வட்டார மருத்துவர் (பொ) கௌதம்ராம், மருத்துவ அலுவலர் செம்பருத்தி, மேத்யூஸ் தொண்டு நிறுவன இயக்குநர் குணாளன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.