செய்யாறு அருகே அரசு கேபிள் டி.வி. வயர்களை சேதப்படுத்தியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த முக்கூர், எரையூர், நேரு நகர் ஆகிய பகுதிகளில் செல்லும் அரசு கேபிள் டி.வி. வயர்களை தொடர்ந்து சேதப்படுத்தியதுடன், அரசு கேபிள் ஒளிபரப்பு சரியாக வராது என்றும், டி.வி. செட்டாப் பாக்ஸ் விரைவில் பழுதாகிவிடும் என்றும் தனியார் கேபிள் டி.வி. நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், கீழ்புதுப்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன் அருகாவூரைச் சேர்ந்த சக்திவேல், யுவராஜ் ஆகியோர் வீண் வதந்தி பரப்பி வந்தனராம். இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. முகவரான செய்யாறு
ரா.அறிவன்பன் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, 4 பேர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.