அருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்நாடு, வெளி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து, செல்கின்றனர். இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அளவுக்கு அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் நீண்ட நேரமாக காத்திருந்து ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், நவக்கிரக சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல, கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com