திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களின் 2 மகள்கள் வரும் நவம்பர் 11-ஆம் தேதி துறவிகளாகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் டி.கவுதம்குமார், டி.அரவிந்த்குமார். ஜெயின் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் பல கல்வி, வியாபார நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கவுதம்குமாரின் 2-ஆவது மகள் பிரெக்சா (26). எம்பிஏ பட்டதாரி. அரவிந்த்குமாரின் 2-ஆவது மகள் சுவேதா (26). இவர், சி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் துறவிகளாக முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மாதவரத்தில் இருவரின் குரு ஆச்சாரியா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியுடன் ஆன்மிக வாழ்க்கையில் பயணிக்க உள்ளனர். இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.