மாற்றுத் திறனாளிகளுக்கு அக்.29-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் வரும் 29-ஆம் தேதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com