பெரியநாயகி அம்மன் கோயிலில்  மாவட்ட நீதிபதி ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம்   ஊராட்சியில் அமைந்துள்ள பெரியநாயகி  சமேத கனககிரீஸ்வரர் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம்   ஊராட்சியில் அமைந்துள்ள பெரியநாயகி  சமேத கனககிரீஸ்வரர் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோயில் எதிரே அமைக்கப்பட்ட சுற்றுலா வாகன நிறுத்தத்தை அகற்றவும், கோயில் கோபுரத்தின் மேல் வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக் குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, வட்டச் சட்டக் குழுச் செயலர்  ராஜ்மோகன், கோயில் அறங்காவல் குழுத் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com