5,700 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை

கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த 5,700 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த 5,700 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கந்திலி ஒன்றியம், பெரியகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் கசிநாயக்கன்பட்டி, பெரியகரம், கதிரிமங்கலம், கரியம்பட்டி உள்ளிட்ட பத்து நியாய விலைக் கடைகளில் 5 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு தமிழக அரசின் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் கலந்து கொண்டனர். சங்கச் செயலர் ராமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com