விண்ணமங்கலம்-ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் முதியவர் இறந்தார்.
ரயில் மோதி முதியவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துசமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சென்றாயன் (60) என்பது தெரியவந்தது.