குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி மண்டப திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்லூரிச் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். புலவர் வே.பதுமனார் வரவேற்கிறார். தமிழருவி மணியன் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை, மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபத் திருப்பணிக் குழு நிர்வாகிகள் த. சண்முகம், வி. பிச்சாண்டி, துரை.கோபி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.