ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியை ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆம்பூர் 36-ஆவது வார்டு பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இப்பணியை எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே. மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.