கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடக்கம்

ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியை  ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியை  ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 ஆம்பூர் 36-ஆவது வார்டு பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இப்பணியை எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே. மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com