நாட்டறம்பள்ளியை அடுத்த டீ.பந்தாரபள்ளி பகுதியில் இயங்கி வரும் வேதா மெட்ரிக். பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஏலகிரி வி.செல்வம் தலைமை வகித்தார்.
விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதில் கிருஷ்ணருக்கு வெண்ணெய், கொழுக்கட்டை மற்றும் இனிப்பு வகைகள் படைக்கப்பட்டன.
தொடர்ந்து கண்ணன் பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.