கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்...!

நாட்டறம்பள்ளியை அடுத்த டீ.பந்தாரபள்ளி பகுதியில் இயங்கி வரும் வேதா மெட்ரிக். பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த டீ.பந்தாரபள்ளி பகுதியில் இயங்கி வரும் வேதா மெட்ரிக். பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஏலகிரி வி.செல்வம் தலைமை வகித்தார்.
 விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதில் கிருஷ்ணருக்கு வெண்ணெய், கொழுக்கட்டை மற்றும் இனிப்பு வகைகள் படைக்கப்பட்டன.
தொடர்ந்து கண்ணன் பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com