ஜோலார்பேட்டை அருகே ரயில் மோதியதில் சனிக்கிழமை 10 ஆடுகள் இறந்தன.
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக மங்களூரு வரை செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை மாலை ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பட்டு ரயில்வே கேட்
அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரயிலின் ஹாரன் சப்தம் கேட்டு மிரண்டு ஓடின. இதில், 10 ஆடுகள் ரயிலில் சிக்கி இறந்தன.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.