வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தனர்.
வேலூர், தொரப்பாடியைச் சேர்ந்த லியாகத் அலி,  ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 நபர்களிடம் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையில் பணம் பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை விமான டிக்கெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.  ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com