ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிப் பரணி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மூலவர் தங்க , வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு உற்சவர் புஷ்ப அலங்காரத்தில் கீழ்மின்னல் கிராமத்தில் எழுந்தருளினார். பின்னர் தங்க ரதத்தில் பாலமுருகன் காட்சி அளித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி செலுத்தி வழிபட்டனர்.