ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிப் பரணி உற்சவம்

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிப் பரணி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிப் பரணி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழாவையொட்டி, பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மூலவர் தங்க , வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு உற்சவர் புஷ்ப அலங்காரத்தில் கீழ்மின்னல் கிராமத்தில் எழுந்தருளினார். பின்னர் தங்க ரதத்தில் பாலமுருகன் காட்சி அளித்தார்.
 விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி செலுத்தி வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com